தட்டாங்குளம் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் MLA-மீது அலட்சிய குற்றச்சாட்டு

மாதவரம் தட்டாங்குளம் சாலையில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் எம்.எல்.ஏ. மீது அலட்சிய குற்றச்சாட்டு

சென்னை, மாதவரம்:

சென்னை மாதவரம் தட்டாங்குளம் சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக்) மதுபான கடை எண் 8836 பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருவதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இந்த மதுபானக் கடை இயங்கி வருவதால் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

மதுபானக் கடைக்கு வரும் நபர்களால் அடிக்கடி தகராறு, மது அருந்திய நிலையில் சாலைகளில் அசம்பாவித செயல்கள், பெண்களிடம் அத்துமீறல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் இந்த மதுபானக் கடை செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி கடை தொடர்ந்து இயங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்கள் கூறினர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக அந்த மதுபானக் கடையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாதவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பிரபுவிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்ததாகவும், நேரடியாகவும் கோரிக்கை வைத்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

“மாதவரம் தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய மக்கள் பிரதிநிதி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மாதவரம் பகுதியில் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், தட்டாங்குளம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடை குறித்து அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றன என்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கூட இந்த மதுபானக் கடை அருகே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மது பாட்டிலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். மேலும், மதுபானக் கடைக்கு வரும் வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் ஒழுங்கின்றி நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு, பெண்களின் நலன், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு, மாதவரம் தட்டாங்குளம் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்குமாறு.. இப்படிக்கு இருக்குமா என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்….

Exit mobile version