கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிநவீன வசதிகளுடன் தனியார் கருத்தரிப்பு மையம் திறப்பு .
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரசாந்த் கருத்தரிப்பு மையம் இன்று திறக்கப்பட்டது. கருத்தரிப்பு மையமானது சென்னையில் முதன்மையான கருத்தரிப்பு மையமாகவும் மகளிர் சுகாதாரத் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியத்துடன் செயல்பட்டு வருவதாகவும், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு உயர்தர கருத்தரிப்பு சிகிச்சை வழங்க அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய கருத்தரிப்பு மையத்தை இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய இருந்த நிலையில் தற்போது நாகர்கோவில் அருகிலேயே கருத்தரிப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு அதிநவீன சிகிச்சைக்கான கருத்தரிப்பு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கருத்தரிப்பு மையமானது தமிழகம் முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு மேம்பட்ட கருத்தரிப்பு மற்றும் மகளிர் சுகாதார சேவைகளை எளிதில் கிடைக்க செய்யும் தனது நோக்கத்தை செயல்படுத்தும் வகையில் இந்த மையத்தில் சேர்க்கை கருத்தரிப்பு முறையில் 60,000 மேற்பட்ட குழந்தைகள் பிறக்கவும் இனப்பெருக்க மருத்துவத்தில் கடந்த பல ஆண்டுகளாக நிபுணத்துவம் பெற்று விளங்கும் இந்த மையம் சிறப்பான மருத்துவ சேவை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கவனிப்பின் மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் தாய்மை கனவை நினைவாக்கி தொடர்ந்து உறுதியாக இருந்து வருகின்றனர். என தனியார் கருத்திருக்கும் மையத்தின், நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் .கீதா ஹரிப்பிரியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
