திருவாரூர் சுற்றுவட்டார கிராமம் பகுதியில் உள்ள கோயில் அருகே முதல் வகுப்பு படிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த 16 மற்றும் 14 வயதுடைய 3 சிறுவர்கள், 5 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், அத்துடன் அதை வீடியோவாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து 3 சிறுவர்களையும் கைது செய்து, தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.



















