4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமைக்குரியவர்… கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

1960-களின் பிற்பகுதியில் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர், இதுவரை சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி தமிழ் திரைப்பட இசை உலகில் தனித்துவமான இடத்தை பிடித்திருந்தார். குறிப்பாக ஆன்மிகப் பாடல்களில் வல்லமை பெற்றவர். ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’, ‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை’ உள்ளிட்ட பல பக்திப் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

அதேவேளை, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அரசியல் பாடல்களையும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்காக திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை’ பாடலை எழுதியவரும் இவரே.

அவரது கவிதிறனுக்காக தமிழ்நாடு அரசு 1980ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. அதோடு கண்ணதாசன் விருது, கவிஞர் திருநாள் விருது, பாரதியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார்.

தற்போது 90 வயதில் காலமான பூவை செங்குட்டுவனின் உடல், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version