வன்னியர்களுக்கு10.5%இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி PMKசார்பில் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மாவட்ட செயலாளர் வேலு பாஸ்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் பிரதான கோரிக்கையாக தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக நடைமுறை படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட மண்டல பொறுப்பாளர் ஐயப்பன் மாநில மகளிர் சங்க துணை செயலாளர் ஷர்மிளாதேவி வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகம் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

Exit mobile version