மணல்கொள்ளை, பாலியல் வன்கொடுமை போதைபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்த கோரி மனு அளித்த தன்மீது கஞ்சா உள்ளிட்ட பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல் துறையினர் மீது குற்றம்சாட்டி வழக்கறிஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சமூகசேகவரும், வழக்கறிஞருமான ஷங்கமித்திரன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தன்மீது தனக்கு தெரியாமலேயே கஞ்சா உள்ளிட்ட பொய் வழக்கு போட்டுள்ளதாகவும், இதற்கு காரணமாக இருந்த மாவட்ட காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் அளித்த மனுவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பல ஆணடுகளாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் மணல் அள்ளி வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது, அரசு அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் 50 அடி ஆழத்திற்கு மணல் அள்ளியது, குறிப்பிட்ட வேலைக்கு என்று மணலை அள்ளி விற்பனைக்காகப் பயன்படுத்தியது, கள்ளச் சாராயம் கஞ்சா கடத்தலை தடுக்காமலும், கள்ளச் சாராயக் கொலைகளை மறைத்து காரணத்தை திசைதிருப்பியது. பாலியல் வன்கொடுமைகள் மீது உறிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கவில்லை போன்ற பல்வேறு குற்றசாட்டுகளை கண்டு கொள்ளாமல் போலீசார் உள்ளதாக நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட நிர்வாகம், காவல்துறையினரிடம் பல மனுக்களை அளித்துள்ளேன். இதனால் ஏற்பட்ட காழ்புணர்ச்சி காரணமாக மாவட்ட காவல்துறையினர் தூண்டுதலால் தன்மீது பல காவல் நிலையங்களில் பொய்யான வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். பொறையார் காவல் நிலையத்தில் யார்மீதோ பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கை தன் மீது இருப்பதாக போலீஸ் சரிபார்ப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்பனார்கோவில், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் எனக்குத் தெரியாமலேயே என் மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளார்கள். ஆகவே மயிலாடுதுறை மாவட்டத்தை சட்டம் ஒழுங்கு பிரச்னையிலிருந்து காப்பாற்ற, அனைத்து மணல்குவாரிகளையும் கள ஆய்வு மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளின் சொத்துக்கணக்குகளை ஆய்வு செய்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தன்மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், இல்லை என்றால் அவர்கள்மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













