மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை சிதைக்கும் மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 200 க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் நீலன் அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் பிரதமர் மோடியை கண்டித்தும் கண்டனம் முழக்கங்களை எழுப்பப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நீலன். அசோகன் கூறும்போது…
கிராமப்புற பொருளாதாரம் மேம்பட வேண்டும், கிராமப்புற பொருளாதாரம் நலிவடைய கூடாது என்பதற்காக காங்கிரஸ் அரசாங்கம் ஒரு கனவு திட்டமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தை கொண்டு வந்தது. தற்போது மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் மோடி தலைமையிலான அரசு இந்த சட்டத்தை சிதைக்கும் நோக்கத்துடன் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதுடன், கிராம பொருளாதாரத்தை நலிவடைய செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் அடையாளங்கள் எந்த இடத்திலும் வந்து விடக்கூடாது என்பதற்காக, மிகக் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டு வருகிறது பாஜக அரசு. இதனை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கமிட்டியின் தலைமையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு வட்டார அளவிலும் போராட்டங்கள் நடைபெற உள்ளன என தெரிவித்தார்.
பேட்டி : நீலன்.அசோகன் – திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்
