விழுப்புரம் காமராஜர் வீதியில், ராஜஸ்தான் சமூக பொதுமக்கள் ேஹாலிகா தகனை தீ மூட்டி கொண்டாடினர்.
ேஹாலி பண்டிகைக்கு முந்தைய நாள் இரவு, தீ மூட்டி கொண்டாடப்படும் நிகழ்வு ேஹாலிகா தகன் என அழைக்கப்படுகிறது. இது தீமை அழிந்து நன்மை வென்றதை குறிக்கிறது. பிரகலாதன் கதையை அடிப்படையாக கொண்ட முக்கிய சடங்காகும். இதையொட்டி, விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள அமராவதி விநாயகர் கோவில் அருகே விஷ்ணு சமாஜ், ராஜஸ்தான் சமாஜ் பொதுமக்கள் 300 பேர், இரவு10 மணிக்கு விறகுகளை குவித்து, தீ மூட்டி, அதில் தீய சக்திகளை எரிப்பதாக நம்பிக்கை கொண்டு வேண்டி கொண்டனர். இந்த தீயை வணங்குவதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள், தீமைகள், நோய்கள் நீங்கி நன்மை உண்டாகிறது. இந்த தீயில் வரும் சாம்பலை எடுத்து அவர்கள் நெற்றியில் பூசி கொண்டனர். இந்த நிகழ்வு சமூகத்தில் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கும் ஒரு கலாசார நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏராளமானூர் மோளம் அடித்து நடனம் ஆடினர் ஒருவர் ஒருவர் அன்பை வெளிப்படுத்தினார்
