தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் – சா.அருணன் – வரவேற்பு

ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு தகுதித் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு கை விடாது என அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் அவர்களின் அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் – சா.அருணன் – வரவேற்பு
~~~
2011ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்து இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என விதியை உருவாக்கி ஆசிரியர் தேர்வு ஆணையத்தின் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு அடிப்படையிலேயே பணி நியமனம் நடைப்பெற்று வந்த நிலையில் பிறகு உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தகுதி தேர்வில் மட்டும் தேர்ச்சியடைந்தால் போதாது போட்டித் தேர்விலும் தேர்ச்சி அடை வேண்டும் என்று அறிவித்து தகுதி தேர்வு மற்றும் போட்டித் தேர்வின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்து வருகின்றனர்.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் பதவி உயர்விற்கும் தகுதி தேர்வு அவசியம் என தகுதி தேர்வில் தேர்ச்சி வெற்றி பெற்று பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அதன் இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது 2011 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் நடைமுறையில் உள்ளவாறு ஆசிரியர் பணிக்கும் பதவி உயர்விற்கும் தகுதி தேர்வு கட்டாயம் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். தகுதி தேர்வு இல்லாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற ஐந்து வருடத்திற்குள் இருப்பவர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து வருத்திற்கு மேல் இருந்தால் இரண்டு வருடத்திற்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே பணி தொடர முடியும் என்றும் அறிவித்து தேர்வில் தேர்ச்சி அடையாத பட்சத்தில் கட்டாய விடுப்பு வழங்கி ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2004ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்காட் மூலமாக சுமார் 1800 கணினி ஆசிரியர்களை மாதம் ரூ . 6000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு பணியாற்றினர். பின்பு 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கணினி ஆசிரியர்களை கைவிட கூடாது என எண்ணி கணினி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடிவெடுத்து அதாவது நேரடியாக நியமனம் செய்ய வழிவகையில்லை. ஆதலால் ஆசிரியர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தியே பணி நியமனம் செய்ய முடியும் என்ற நிலையை அறிந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அவர்களுக்குள்ளாக ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வை நடத்தி அனைவரையும் பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி அழகு பார்த்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

மேலும் 2003ஆம் ஆண்டு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அப்போதைய அதிமுக அரசு கொண்டுவந்து ஒட்டு மொத்த அரசு ஊழியர்களை வஞ்சித்தது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர அப்போது காலைவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்ட 1.5 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்தனர். வேலைநிறுத்த போராட்டத்தை நசுக்க 15000 இளநிலை உதவியாளர்களை வேலைவாய்ப்பு அலுவலக மூலமாக பதிவு மூப்பு அடிப்படையில் மாதம் ரூ. 4000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்தனர் பின்பு பணி நிரந்தரம் செய்ய கோரியும் நிரந்தரம் செய்யவில்லை. பின் 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 15000 இளநிலை உதவியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்தார். அப்போது இளநிலை உதவியாளர் நியமனம் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தான் நியமனம் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும் தேர்வாணையத்தின் மூலமாக மட்டும் நியமனம் செய்ய முடியும் என தீர்ப்பளித்தது , இவர்கள் வாழ்வு கேள்விகுறியாகுமே என்ற உயரிய எண்ணம் வைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இவர்கள் அதிமுக ஆட்சியில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் தானே என்ற எண்ணம் வைக்காமல் தேர்வாணையத்தின் மூலமாக தானே நியமிக்க வேண்டும் என்று கூறி 15000 இளநிலை உதவியாளர்களுக்கு உள்ளாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு நடத்தி அனைவரையும் பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காவலர் என்பதை நிரூபித்து காட்டினார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

இதே நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் ஆசிரியர்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த உத்தரவு ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை தந்து உள்ளனர்.

இந்நிலையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறுவுருவம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர்களை கை விடமாட்டார் என்று தெரிவித்து இருப்பதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்கிறது. இந்த அறிவிப்பு ஏற்கனவே இளநிலை உதவியாளர் பணி நிரந்தரம் கணினி ஆசிரியர்கள் பணி நிறந்தரம் கஉறித்த முடிவை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எவ்வாறு கையாண்டாரோ அந்த நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கையாளுவார் என்ற நம்பிக்கையோடு ஆசிரியர் சமுதாயம் உள்ளது.

Exit mobile version