மயிலாடுதுறையில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தையில் இழுபறி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் கிராமத்தில் நேற்று மதியம் மின்கம்பம் பொருத்தும் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த முடி திருச்சம்பள்ளியைச் சேர்ந்த மின்சார துறை ஒப்பந்த ஊழியர் தினகரன் விவகாரத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்காமல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று இரவு முதல் வருவாய்த்துறை மின்சாரத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா, மின்சாரத்துறை மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் மற்றும் போலீசார் இன்று காலை முதல் நடத்தி வரும் பேச்சுவார்த்தை நீடிப்பு. 25 லட்சம் இழப்பீடு கேட்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பேச்சு வார்த்தையில் இழுபறி. ஒப்பந்ததாரரிடமிருந்து இழப்பீடு தொகை பெற்று தர வேண்டும், மெத்தனமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.

















