சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. இதில்.
ஸ்ரீ வைகுண்டம் – சூரிய ஸ்தலமாகவும், விஜயாசன பெருமாள் திருக்கோவில் வரகுணமங்கை சந்திர ஸ்தலமாகவும் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில் செவ்வாய் ஸ்தலமாகவும், திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோவில் புதன் ஸ்தலமாகவும், ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில்
குரு ஸ்தலமாகவும்தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் திருக்கோவில் சுக்ரன் ஸ்தலமாகவும் திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோவில்
சனி ஸ்தலம்மாகவும். திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோவில் ராகு ஸ்தலமாகவும். திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோவில கேது ஸ்தலம்மாகவும் விளங்குகின்றன.
பொதுவாக சிவன் கோவில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோவில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோவிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.
ஸ்ரீ ராமாவதாரம் – சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் – சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம் – செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம் – புதன்
ஸ்ரீ வாமனவதாரம் – குரு
ஸ்ரீ பரசுராமாவதாரம் – சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம் – சனி
ஸ்ரீ மச்சாவதாரம் – கேது
ஸ்ரீ வராகவதாரம் – ராகு
ஸ்ரீ பலராமவதாரம் – குளிகன்
பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நாம் 9 நவகிரக கோயில்களை பற்றி காண்போம்.
