சீர்காழியில் அனைத்து பிரதானவீதிகளிலும் மாவட்ட SP.ஸ்டாலின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நடந்தே சென்று கண்காணிப்பு  பணி

சீர்காழியில் அனைத்து பிரதான வீதிகளிலும் மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நடந்தே சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் திடீர் வருகை புரிந்து நகரில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியை ஆய்வு செய்தார். பின்னர் எஸ்.பி. ஸ்டாலின் நகரில் பிரதான வீதிகளான தென்பாதி , அரசு மருத்துவமனை சாலை, பிடாரி வடக்கு வீதி, தடைவீதி, கச்சேரி சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் விதமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதை கண்காணிக்கும் வகையில், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து தடுக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும், சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் கமல் ராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மணவாளன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.மாவட்ட எஸ்பி தலைமையில் அதிகமான போலீசார் கண்காணிப்பு பணியில் நடந்தே சென்று ஈடுபட்டது பொதுமக்களிடம் வரவேற்ப்பை பெற்றது.

Exit mobile version