திமுக கூட்டணியை சிதைப்பதற்கு பல்வேறு சதி வேலைகள் நடைபெற்றாலும், கூட்டணியை ஒருங்கினைத்து வெற்றிகரமாக ஸ்டாலின் அமைத்துள்ளதாகவும், மாநில உரிமை, மொழி உரிமை, சகோதரத்துவம், மதச்சார்ப்பின்மையை பாதுகாக்கிற தேர்தலாக சட்டமன்ற தேர்தல் அமைய உள்ளதாக திமுக விழுப்புரம் வேட்பாளரும் எம் எல் ஏவுமான லட்சமணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் விழுப்புரம் தொகுதி வேட்பாளர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மயிலம் தொகுதி தேமுதிக வேட்பாளர் எல் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய மயிலம் தொகுதி தேமுதிக வேட்பாளர் வெங்கடேசன் தமிழகத்தில் திமுக கூட்டணியை விட பெரிய கூட்டணி அமைக்க முடியாது இது எதிரணி கூட்டணியிருக்கும் தெரியும் எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் எந்த அளவிற்கு வெறுக்கிறார்களோ அதை விட அதிகமாக மோடியை எதிர்க்கிறார்கள், பாஜக அதிமுக கூட்டணியை அடியோடு அழிக்க வேண்டுமென பிரேமலதா திமுகவுடன் கூட்டணியை அமைத்துள்ளதாகவும், மதச்சார்பற்ற கூட்டணி தமிழகத்தில் வெல்லும் என தெரிவித்தார்.
திமுக சட்டமன்ற உறுப்பினரும் விழுப்புரம் தொகுதி வேட்பாளருமான லட்சுமணன் மேடை பேச்சு
திமுக கூட்டணியை சிதைப்பதற்கு பல்வேறு சதி வேலைகள் நடைபெற்றன.
இந்த கூட்டணியை ஒருங்கினைத்து வெற்றிகரமாக ஸ்டாலின் அமைத்ததாகவும், தமிழக முதல்வர் கொண்டு வந்த திட்டங்கள் தமிழகத்திலுள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் சென்றடைந்து இருப்பதாக கூறினார். எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்கிற இல்லத்தின் குடும்ப உறுப்பினராக தான் இருப்பேன் என்றும் சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் மக்களின் சேவகனாக தான் உள்ளதாக லட்சுமணன் தெரிவித்தார்.
மகளிரை கொச்சைப்படுத்திய சி.வி சண்முகத்தை சிங்கம் என்று சொல்லி கொண்டால் ஏற்க முடியாது, மயிலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளரின் வெற்றி உறுதி உறுதி என தெரிவித்த அவர் மாநில உரிமை, மொழி உரிமை,சகோதரத்துவம், மதச்சார்ப்பின்மையை பாதுகாக்கிற தேர்தலாக சட்டமன்ற தேர்தல் அமைய உள்ளதாக கூறினார்.
மத்திய அரசு மாநில அரசுக்கு நிதியளிக்காமல் நெருக்கடி கொடுத்தாலும் மாநிலத்தை வளர்ச்சி அடைய தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்திருப்பதாகவும், சுத்தமான சுகாதாரமான நகரமாக விழுப்புரம் இருக்க வேண்டும் சாலை வசதிகள் மேம்படுத்த வேண்டும் ஏரி குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கொண்டு வரவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

















