தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் தமிழ் நாடு உணவுத்துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வெங்கடரமணன் நேரில் ஆய்வு செய்தார் பின்னர் துறைமுகத்தில் மீனவர்கள் பொதுமக்களை சந்தித்தார் அப்போது மீனவர்கள் பொதுமக்கள் பல கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்தனர் மனு அளித்தனர் இதில் மீனவர்கள் தங்கள் பகுதி வளர்ச்சிக்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் மீனவர்களுக்கான உதவி தொகை உள்ளிட்ட திட்டங்களை விரைந்து வழங்க வேண்டும் தமிழறிஞர் சீகன்பால்கு மணிமண்டபம் பணிகளை துவங்கி துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர் பெண் ஒருவர் நியாய விலை கடையில் வழங்கப்படும் அரிசி துவரை தரம் இன்றி இருப்பதாக அமைச்சரிடம் தெரிவித்தார் மேலும் பல கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்தனர். அமைச்சர் ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Exit mobile version