March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

மாங்கல்யம் அருளும் மகாசக்தி காத்யாயனி

by Satheesa
September 24, 2025
in Bakthi
A A
0
மாங்கல்யம் அருளும் மகாசக்தி காத்யாயனி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோவில் அருகே பிரியும் திருநீர்மலை சாலையில் கல்யாண வரம் தரும் காத்யாயனி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
திருமணம் தடைபடும் கன்னியர்கள், ஆண்கள் மூன்று முறை சென்று திருமண அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து வந்தால் திருமணம் உறுதியாகி ஆறுமாதத்தில் நடைபெறுவதாக ஐதீகம்.

காத் என்றால் திருமணம், அயணம் என்றால் ஆறுமாதம். குடும்ப பிரச்னை, உறவினர்களால் பிரச்னை,பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்து திருமணம் கைகூட இந்த அம்பிகையின் சன்னதியில் வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய தினங்களில் ஒரு நாளை எடுத்துக்கொண்டு மூன்று முறை சென்று திருமணப்பேறு வேண்டி அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.

முதல் வாரம் காத்யாயனி பூஜை இரண்டாம் வாரம் விவாஹ ரட்சாபூஜை மூன்றாவது வாரம் ஜென்ம பத்ரிகா பூஜை – என்ற படி செய்து மங்கள ரட்சை கட்டிக்கொள்ள வேண்டும். 26 வயதைக் கடந்து களத்திர தோ~த்தால் திருமணம் தடைபடும் பெண்களுக்கு சுபநாளில் காமேஸ்வரி துளசி யக்ஞம் என்ற விவாஹ வேள்வி நடத்தப்படுகிறது.

ஆலயத்தில் தோரணகணபதி, மாரிசக்தி, பாலமுருகன், நாகராஜர், துர்க்கை,பத்ம விமானக்கருவறையில் கிழக்கே திருமுகம் கொண்டு ஒளிதரும் சந்திரகாந்தக் கல்லால் செதுக்கப்பட்டவளாக அமர்ந்து அருள் தருகிறாள். ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் மாலை 6 மணிக்கு புத்ர லாபம் அருளும் பாலகாத்யாயனி யக்ஞம் செய்து இலவசமாக மூலிகை மருந்து ப்ரசாதம் வழங்கப்படுகிறது.

மூன்றாவது வார தரிசனத்தில் ஒரு பெண் ஜன்ம பத்ரிகா பூஜை செய்ய வேண்டும். அதாவது ஜனனம் ஆகும்போது கிரகங்கள் சரியாக அமையாவிட்டால் கல்யாணம் தடைபடுகிறது. அந்தக் கிரகங்கள் நல்ல இடத்தில் சென்று பெண்ணுக்கு சுபமங்களமான வாழ்க்கை அருளிட தேவியை நவகிரக நாயகியாக நினைத்து அவளது பீடத்தில் ஜன்மபத்ரிகா என்னும் ஜாதகத்தை வைத்து ஆகமபீஜ மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்வதாகும். இந்த மூன்று தரிசனங்களையும் முறையோடு செய்யும் ஒரு பெண் மூன்று பட்சங்களுக்குள் கல்யாண வரத்தை பெறுகிறாள் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் திருமணபேறு வேண்டி தரிசிக்க வரும் பெண்-ஆண் இருபாலருக்கும் அதிக வயதை தாண்டி இருப்பின் திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் காமேஸ்வரி துளசியக்ஞம் சுயம்வரகலா, கந்தர்வராஜ யக்ஞம் செய்கிறார்கள். துளசியால் யக்ஞம் செய்து விட்டால் விரைவில் மணமேடை ஏறுவர் என்பது நடந்துவரும் உண்மை.

ஸ்ரீசக்தி கோவிலின் தலவிருட்சம் வெண்மை, கரும்பச்சை, மத்திம பச்சை, கிரிநிம்பம் என்கிற வகைகளில் மத்திம பச்சையும், கிரிநிம்பமும், திருமண மரமும் தலவிருட்சங்களாக இருக்கின்றன. இத்தலத்தில் பிரதி பவுர்ணமி அன்று மாலை 6 மணிக்கு மகாமேரு பூஜை, சவுபாக்கிய ஹோமம், ஸ்ரீ காத்யாயனி புத்ரதா ஹோமம் செய்யப்பட்டு குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கிரிநிம்ப மூலிகை ஹோமப் பிரசாதத்துடன் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளாக புத்திரபேறு இல்லாதவர்கள் இந்த கிரிநிம்ப விருட்ச இலையை உட்கொண்டால் கருவாய் திறந்து பலன் பெறலாம் என்பது மருத்துவ ரீதியான உண்மை ஆகும். எல்லா பக்தர்களும் இந்த ஆலயத்தை ‘சக்தி கோவில்’ என்று பயபக்தியோடு அழைக்கிறார்கள். உண்மைதான்! கல்யாண வரம் தருகின்ற சக்தி வாய்ந்த அம்பிகையாக இந்த அன்னை விளங்குகிறாள்.

நிதி தரும் இரண்டு குபேரன் சிலைகள் சக்தியின் பிரதிமை களாக மேல் தளத்தை தாங்கி நிற்க, அன்னை சக்தி தேவி நாகாபரணத்தோடு காட்சி தருகிறாள். அருகில் கணேசரும், முருகனும் காட்சி தருகிறார்கள். இந்த ஆலயத்தில் மூன்று வெவ்வேறு தேவியர் இரு சன்னிதிகளில் அமர்ந்து அருள் தருகின்றனர். முகப்பில் அலங்கரிக்கும் தோரண வாயிலுக்கு நேராகச் சக்தி ஸ்ரீ மங்கள மாரியின் துவார சக்திகளான கங்கை, யமுனை ஆகியோர் நின்றிருக்க தென் கோ~;ட மேகலை தொடக்கத்தில் தோரண கணபதி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

கடன் பெற்று அடைக்க முடியாதவர்களுக்கு, கடன் கொடுத்து திரும்ப பெற முடியாத வணிகர்களுக்கும் இந்த விசே~ கணபதியை செவ்வாய், சனி சதுர்த்தி தினங்களில் தீபமேற்றி 6 வாரங்கள் அர்ச்சித்து துதி செய்ய பலன் கிடைத்து விடும். நலம் தரும் விருட்சங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவது உண்மை என்பதால் இங்கே கணவன்- மனைவி பிரிந்து விட்டால் சேர்ந்து விடும் சக்தி வாய்ந்த ஜலந்தரா ஞாயிறு, வெள்ளி, பவுர்ணமி நாட்களில் மட்டும் வழங்க ஆலயத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கருவறை வெளிசுற்றின் கோஷ்டங்களில் அ~;ட லட்சுமிகள் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். இதற்கு அ~;டலட்சுமி கோபுரம் என்றே பெயர்.
தமிழகத்தின் ஒருநாள் சிறப்பு தரிசன முறைகளில் இந்த சன்னதியும் ஒரு வரிசையில் உள்ளது. திருவேற்காடு கருமாரி அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், தென் குன்றத்தூர் காத்யாயனி அம்மன் என்ற வரிசையில் மூன்றாவது திருத்தலமாக விளங்குகிறது.

சக்தியை வழிபடப் பூர்வ புண்ணியம் வேண்டும் என்று தன் சவுந்தர்ய லகரியில் எடுத்துரைத்தார் ஆதி சங்கரர். அந்த சக்தி தேவியர் மூன்று திருநாமங்களுடன் ஒரே நேர்கோட்டில் 12 கி.மீ. தொலைவிற்குள் திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூரில் கோவில் கொண்டு அருள் தருகின்றனர்.

காஞ்சி மாவட்ட எல்லையில் தென் சென்னைப் பகுதியில் தொண்டை மண்டலத்தில் 3 சக்தி தேவியர்கள் 12 ராசியினருக்கும் வாழ்வில் தடைகள் அகன்று ஐஸ்வர்யமான வாழ்வைத் தர அருள்புரிகின்றனர். இந்த அபூர்வ சக்திகளை ஒரே நாளில் தரிசனம் செய்து தலத்திற்கு 3 நெய் தீபங்களை ஏற்றி பிரார்த்தனை செய்வதற்கு திரிசக்கர தரிசனம் என்று பெயர்.

இந்த சக்தி யாத்திரையை முயற்சி, வெற்றி வியாபாரத்தில் உயர்வடைய ஞாயிறன்றும், காரியத்தடை அகல பவுர்ணமி அன்றும், கடன் தீர்ந்து சொந்த வீடு அமைய செவ்வாயன்றும், தன்யாதி, துர்சக்தி விலக அமாவாசையிலும், தம்பதி கோர் வழக்கு தீர, குழந்தைப்பேறு பெற சனிக்கிழமை அன்றும் செல்வச் சேர்க்கை லட்சுமி கடாட்ச பெற வெள்ளிக் கிமையிலும் தரிசனம் செய்ய வேண்டும்.

Tags: AanmeegamdivonationalkundrathurMahashakti KatyayaniMangalyam graces Mahashakti Katyayanitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Next Post

ரஜினியின் முத்து படத்தைப் புகழ்ந்த ஷின் சான் இயக்குனர் !

Related Posts

கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்
Bakthi

கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்

March 1, 2026
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரு பரிகா தலமான வாகீஸ்வரர் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மாசி மகோற்சவம்
Bakthi

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரு பரிகா தலமான வாகீஸ்வரர் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மாசி மகோற்சவம்

March 1, 2026
கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் மாசி பிரமோற்சவ விழா தன் தவத்தை கலைத்த மன்மதனை சிவன் நெற்றிக்கண்ணால் எரிக்கும் காமதகன திருவிழா
Bakthi

கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் மாசி பிரமோற்சவ விழா தன் தவத்தை கலைத்த மன்மதனை சிவன் நெற்றிக்கண்ணால் எரிக்கும் காமதகன திருவிழா

February 28, 2026
மயிலாடுதுறையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்மணியின் நினைவாக தீப்பாய்ந்தாள்அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா
Bakthi

மயிலாடுதுறையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்மணியின் நினைவாக தீப்பாய்ந்தாள்அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

February 24, 2026
Next Post
ரஜினியின் முத்து படத்தைப் புகழ்ந்த ஷின் சான் இயக்குனர் !

ரஜினியின் முத்து படத்தைப் புகழ்ந்த ஷின் சான் இயக்குனர் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

0
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

March 2, 2026
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

March 2, 2026
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

March 2, 2026

Recent News

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

March 2, 2026
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

March 2, 2026
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

March 2, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.