மயிலாடுதுறையின் நகை ஆர்வலர்கள் மற்றும் இல்லத்தரசிகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில் பிரத்யேக “பிரைடல் நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை” விழா மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. 2026 மார்ச் 07-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஆபரணத் திருவிழாவின் துவக்க விழா மயிலாடுதுறை கிளையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தேவி, கவிபிரபா, தேவிகா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவர்களுடன் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மயிலாடுதுறை கிளைத் தலைவர் டிவின் மற்றும் கிளை ஊழியர்கள் பங்கேற்று வாடிக்கையாளர்களை வரவேற்றனர். உலகத்தரம் வாய்ந்த கலைநயமிக்க அணிகலன்கள் இங்கு அணிவகுத்து நிற்பது இக்கண்காட்சியின் தனிச்சிறப்பாகும். குறிப்பாக, அணிந்தாலே ஜொலிக்கும் ‘மைன்’ வைர நகைகள், பிரம்மாண்டமான வடிவமைப்புகளைக் கொண்ட வெட்டாத வைரத்தால் செதுக்கப்பட்ட ‘எரா’ நகைகள் மற்றும் பொக்கிஷமாகக் கருதப்படும் விலையுயர்ந்த கற்களால் ஆன ‘எத்தினிக்’ தொகுப்புகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. மேலும், இந்திய கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் ‘டிவைன்’ நகை வடிவமைப்புகள் திருமண வைபவங்களுக்கு ஏற்ற வகையில் இடம்பெற்றுள்ளன.
தற்போது 14 நாடுகளில் 419 சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகின் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்துள்ள மலபார் கோல்டு, தனது வெளிப்படையான வணிக முறைக்காக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு நகையும் அதன் நிகர எடை, கற்களின் எடை, சேதாரம் மற்றும் கற்களுக்கான விலை ஆகியவற்றைத் துல்லியமாகக் குறிப்பிடும் விலைப் பட்டியலுடன் (Price Tag) விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் எவ்வித ஒளிவுமறைவுமின்றி தங்களுக்குப் பிடித்த நகைகளைத் திட்டமிட்டு வாங்க முடிகிறது. வாங்கும் நகைகளுக்கு ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு மற்றும் எப்போது வேண்டுமானாலும் பழைய நகைகளை மாற்றி புதிய நகைகளைப் பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் எனப் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை நிறுவனம் வழங்கி வருகிறது. வெறும் லாப நோக்கம் மட்டுமன்றி, தனது வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாடு போன்ற சமூக நலத் திட்டங்களுக்குச் செலவிட்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் (CSR) செயல்படுவதே இந்நிறுவனத்தின் இமாலய வெற்றிக்கு முக்கிய காரணமாகும். மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, நவீன காலத்திற்கு ஏற்ற பிரைடல் நகைகளை வாங்கி மகிழலாம்.
















