கொடுக்கப்பட்ட காலக்கெடுவிலிருந்து பாகிஸ்தான் மக்கள் இந்தியாவில் இருந்து வெளியேராவிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
காஷமீர் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே கடும் பரபரப்பு சூழ்நிலை எழுந்துள்ளது. இந்தியாவுக்கு சார்க் விசாவில் வந்துள்ளவர்கள் ஏப்.29ம் தேதிக்குள் வெளியேற ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் இந்தியா நாட்டிற்கு சுற்றுலா, படிப்பு, மருத்துவம், பொதுநிகழ்வு,என வந்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை 510 பேர் அட்டாரி எல்லை வழியாக சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது . அதே போல் பாகிஸ்தான் நாட்டிலிருந்தும் இருந்து இந்தியர்களும் இந்தியாவை நோக்கி புறப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
குறிப்பிட்ட நாளுக்குள் நாட்டைவிட்டு செல்லாமல் இந்தியாவில் இருப்பது கண்டுகொள்ளப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதன் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு பிறகு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அல்லது ரூ. 3 லட்சம் அபராதமும் வழங்க முடியும்.