ஜெய்கிரண் தலைமையிலான ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம், தனது முதல் தயாரிப்பாக உருவாக்கும் புதிய திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல வெற்றிகரமான தயாரிப்புகளில் பணியாற்றிய அனுபவமுள்ள ஜெய்கிரண், தனக்கு நெருக்கமான ஒரு உணர்வுப்பூர்வ கதையை மக்களிடம் கொண்டுசெல்லும் நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் மூலம், சிறந்த நகைச்சுவை நடிகராக ரசிகர்களிடம் பரிச்சயமான KPY பாலா, கதாநாயகனாக சினிமாவில் தனது பயணத்தை தொடங்குகிறார். இதுவரை கலகலப்பான கதாபாத்திரங்களில் நடித்த அவர், இந்நடிகையில் மாறுபட்ட, உணர்ச்சி நிரம்பிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை இயக்கும் ஷெரீஃப், தனது முதல் படமான ரணம் அறம் தவறேல் மூலமாக விமர்சன ரீதியாகவும், மக்களிடையே வரவேற்பு பெற்ற இயக்குநர் ஆவார். இப்போது அவர் இயக்கும் இரண்டாவது திரைப்படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு Feel-Good Emotional Drama ஆக உருவாகிறது. கதை மற்றும் திரைக்கதை இரண்டையும் ஷெரீஃப் தான் எழுதியுள்ளார்.
இயக்குநர் ஷெரீஃப் கூறும்போது, “ரணம் அறம் தவறேல் எனும் த்ரில்லர் படத்திற்குப் பிறகு, என் இரண்டாவது திரைப்படமாக இந்த உணர்வுப்பூர்வமான கதையை தேர்வு செய்துள்ளேன். இது எனது மனதிற்கு நெருக்கமான ஒன்று. தயாரிப்பாளர் ஜெய்கிரணிடம் இந்தக் கதையை கூறியதும் அவர் யோசிக்காமல் உடனே ஒப்புதல் அளித்தார். அந்த நம்பிக்கை எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் உறுதியையும் அளித்தது. பாலாவுடன் இணைந்து, தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாஜி சக்திவேல், மற்றும் நடிகை அர்ச்சனா போன்ற கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு பெருமையாக இருக்கிறது. இது நேர்த்தியான, உணர்ச்சிப்பூர்வமான சினிமாவாக உருவாகும்,” என்றார்.