காந்தாரா 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் 2022-ஆம் ஆண்டு வெளியானதும் பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக தற்போது ‘காந்தாரா 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் முடிவடைந்துள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில், படக்குழுவினர் ஒரு சிறப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்காக மூன்று ஆண்டுகள் நீடித்து கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு நாள்களில் இதில் பணியாற்றிய சிலர் மரணமடைந்ததையடுத்து, இந்தச் சம்பவங்களை ‘காந்தாரா’ திரைப்படத்துடன் இணைத்துப் பேசும் வார்த்தைகள் திரையுலகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.

இத்திரைப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரிஷப் ஷெட்டியுடன் நடிகர் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையை அஜேஷ் லோக்நாத் அமைத்துள்ளார்.

‘காந்தாரா 2’ திரைப்படம் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

Exit mobile version