சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற உள்ள 48வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவின் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில் அழகு தோட்டங்களுக்கு போட்டி நடத்தப்பட உள்ளது.
தோட்டக்கலை துணை இயக்குனர் மஞ்சுளா வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டு தோட்டம் (500 சதுர அடிக்கு குறைவாக), மாடித்தோட்டம், பங்களா தோட்டம் (500 சதுர அடிக்கு மேல்), ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்களை பராமரிப்போர் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
பங்கேற்க விரும்பும்வர்கள், https://tnhorticculture.tn.gov.in/site-uploads/Salem.Garden.Application.pdf என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்தபின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்:
வினோதினி, உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலகம், சீலநாயக்கன்பட்டி, சேலம் என்ற முகவரிக்கு அல்லது
ஏற்காடு பகுதிக்கானவர்கள் :
மோகன், தோட்டக்கலை உதவி இயக்குனர், அண்ணா பூங்கா, ஏற்காடு என்ற முகவரிக்கு வழங்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
சேலம் தொடர்புக்கு: 95977-51999
ஏற்காடு தொடர்புக்கு: 99422-51436
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் மே 17ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி கூறியதாவது: “ஏற்காடு மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 24ம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும். ஊட்டி மற்றும் கொடைக்கானல் விழாக்களுக்கு பின்னர், ஏற்காடு விழாவின் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்,” என்றார்.