சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் மகா யோகம் சார்பில் யோகா தின விழிப்புணர்வு பேரணி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைப்பு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று யோகா பயிற்சி செய்தபோது 10 மாத குழந்தை யோகா செய்து காண்பித்து அசத்தல்.
காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்ட மகா மகரிஷி அறக்கட்டளை மகாயோகம் சார்பில் பதினோராவது சர்வதேச யோகா தினம் மற்றும் யோகா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியாக தமிழகம் முழுவதும் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காவிரி நகரில் துவங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்த பேரணியில் யோகா தூய்மையான சுவாசத்தை தரும், தினமும் செய்ய வேண்டியது யோகா போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் அன்பகம் அருளகம் அறிவகம் அறங்காவலர் கிருபாகரன் பழச்சாறு கொடுத்து பேரணியை நிறைவு செய்ததை தொடர்ந்து மகா யோகம் மயிலாடுதுறை மாவட்ட பயிற்சியாளர் ரஞ்சனா ரிஷி முன்னிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 10 மாத பெண் குழந்தை வஜ்ராசனம் சம கோண ஆசனம் செய்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.