காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா அதிர்ச்சி, வருத்தம் தெரிவித்தது

காசாவில் பத்திரிகையாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், வருத்தத்திற்குரியதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
“காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. மிகவும் வருந்தத்தக்கது. மோதலில் பொதுமக்கள் உயிரிழப்புகளை இந்தியா எப்போதும் கண்டித்து வருகிறது. இஸ்ரேலிய அதிகாரிகள் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்றார்.

மேற்காசியாவில், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனப் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2023 அக்டோபரில் போர் வெடித்தது. தொடர்ந்து நடைபெறும் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் காசா பலத்த சேதங்களை சந்தித்து வருகிறது.

சமீபத்தில் காசாவின் முக்கிய மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இதனை உலகம் முழுவதும் பல்வேறு தரப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Exit mobile version