அனைத்து ரேஷன் கடைகளில் மது விற்பனை சைக்கிளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வாக்குறுதி

அனைத்து ரேஷன் கடைகளில் மது விற்பனை செய்யப்படும்
சைக்கிளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் வாக்குறுதி.

திமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. திருத்தணி கோட்டாட்சியர் அலுவலககத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய சுயேட்சை வேட்பாளர் வீரமங்கலம் சேட்டு என்பவர் சைக்கிளில் வந்திருந்தார். அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்.. கடந்த 15 ஆண்டுகளாக அனைத்து சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன். இலவச திட்டங்களுக்கு எதிரானவர்கள் தனக்கு ஓட்டு போட வேண்டும். அரசு கஜானாவை நிரப்பும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளில் மது விற்பனை, விவசாயிகள், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் ரத்து, சிறுமிகள், பெண்களுக்கு பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாத்திட பாதுகாப்பான பாலியல் தொழில் செய்ய நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தர பாடுபடுவேன் என்று தேர்தல் வாக்குறுதிகள் அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version