August 18, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சின்னமனூரில் பல கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட கண்மாய்களால் உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம்

by sowmiarajan
January 1, 2026
in News
A A
0
சின்னமனூரில் பல கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட கண்மாய்களால் உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சங்கிலித்தேவன் மற்றும் விஸ்வன்குளம் கண்மாய்கள், ஒரு காலத்தில் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கித் தூர்ந்து போயிருந்தன. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த அவலநிலையை மாற்ற, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதன்படி, சங்கிலித்தேவன் கண்மாய் 1.31 கோடி ரூபாய் மதிப்பிலும், விஸ்வன்குளம் கண்மாய் 73.70 லட்சம் ரூபாய் மதிப்பிலும் புனரமைக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கண்மாயைச் சுற்றிப் பாதுகாப்பு வேலிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நவீன நடைபாதைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தொலைநோக்கு நடவடிக்கையினால், இன்று சின்னமனூர் நகரின் மையப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதுடன், இப்பகுதி மக்களின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் நடைப்பயிற்சி மையமாகவும் இக்கண்மாய்கள் மாறியுள்ளன.

இருப்பினும், புனரமைக்கப்பட்ட இந்த நீர்நிலைகளைத் தொடர்ந்து பராமரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. 5.75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இரு கண்மாய்களும் மின்நகர், வ.உ.சி. நகர், எரசக்கநாயக்கனூர் சாலை உள்ளிட்ட நகரின் பெரும்பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளுக்கு நீர் ஆதாரமாக விளங்குகின்றன. ஆனால், தற்போது விஸ்வன்குளம் கண்மாயில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்துள்ளதோடு, ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுவதால் நீர் அசுத்தமடைந்து வருகிறது. மேலும், கழிவுநீர் கலப்பதாலும், பாதுகாப்பு வேலிகள் சேதமடைந்துள்ளதாலும் கண்மாயின் புனிதம் கெடுவதாகக் குமுறுகின்றனர் அப்பகுதி மக்கள். சங்கிலித்தேவன் கண்மாய் கரைகளில் செடிகொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், நடைப்பயிற்சி செய்வோர் இடையூறுகளைச் சந்திப்பதோடு, இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது.

இது குறித்துச் சமூக ஆர்வலர் லோகேந்திரராஜன் கூறுகையில், “மழைக்காலங்களில் உபரி நீர் தேங்குவதால் நகர் முழுவதும் வீட்டு கிணறுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. நகராட்சியின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும், இதில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, நடைபாதையைச் சுற்றி மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்க வேண்டும். மேலும், நடைப்பயிற்சி செய்வோருக்குக் குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும்,” என்றார். மற்றுமொரு குடிமகனான விஜயராமன் பேசுகையில், “நகராட்சி நிர்வாகத்தைச் சுட்டிக்காட்டுவதை விட, பொதுமக்களும் குப்பைகளை வீசாமல் ஒத்துழைக்க வேண்டும். பெண்கள் மற்றும் முதியவர்கள் அமர்ந்து இளைப்பாற இருக்கை வசதிகள் செய்திட வேண்டும். மேலும், கண்மாய் கதவுகளைக் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் திறந்து வைத்து, இரவு நேரங்களில் பூட்டுவதன் மூலம் சமூக விரோதச் செயல்களைத் தடுக்க முடியும்,” எனத் தெரிவித்தார். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இந்த நீர்நிலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல, நகராட்சி நிர்வாகம் உடனடிச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சின்னமனூர் மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: chinnamanurGroundwaterLevel IrrigationRenovation WaterTank
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மூணாறில் ஆங்கிலேயர் காலத்துப் பாரம்பரியத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் விற்பனை பன்மடங்கு அதிகரிப்பு.

Next Post

குமுளியில் வனத்துறை முட்டுக்கட்டை நீங்கியது ஐயப்ப பக்தர்களுக்காக 24 மணி நேர இலவச மருத்துவ முகாம்

Related Posts

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு
News

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
News

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்
News

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு
News

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

August 18, 2026
Next Post
குமுளியில் வனத்துறை முட்டுக்கட்டை நீங்கியது ஐயப்ப பக்தர்களுக்காக 24 மணி நேர இலவச மருத்துவ முகாம்

குமுளியில் வனத்துறை முட்டுக்கட்டை நீங்கியது ஐயப்ப பக்தர்களுக்காக 24 மணி நேர இலவச மருத்துவ முகாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

0
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

0
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

0
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

0
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

August 18, 2026

Recent News

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

August 18, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.