“அந்த புத்தி மழுங்கிய கட்சிக் கூட்டங்களுக்கு நான் செல்ல மாட்டேன்” – சத்யராஜின் உரை பரபரப்பு

நடிகர் சத்யராஜ், “அந்த புத்தி மழுங்கிய கட்சிக் கூட்டங்களுக்கு நான் ஒருபோதும் செல்ல மாட்டேன்” என்ற கூற்றின் மூலம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவர் இந்தக் கருத்தை யாரை குறிவைத்து சொன்னார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.

சமீபத்தில் பெரியார் அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்யராஜ், தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். “நான் 250 படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் பெரும்பாலானவை எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளன. ஆனால், பெருமைக்குரிய படம் ஒன்றை மட்டும் சொல்வதானால், அது ‘தந்தை பெரியார்’ திரைப்படமே. அந்தப் படத்தில் நடித்ததற்காகவே, பெரியார் 90 ஆண்டுகளாக அணிந்திருந்த மோதிரத்தை எனக்கு பரிசாக வழங்கினார்கள். அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை” என்று சத்யராஜ் கூறினார்.

மேலும் அவர், “எந்த இயக்கம் நடத்தினாலும் – திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம் அல்லது விடுதலைச் சிறுத்தைகள் – பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்ற சிந்தனைகளை மையமாகக் கொண்ட கூட்டங்களுக்கு நான் எப்போதும் செல்வேன். ஆனால், சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு இல்லாத, புத்தி மழுங்கிய கட்சிக் கூட்டங்களுக்கு நான் ஒருபோதும் போக மாட்டேன்” எனத் தெரிவித்தார்.

சத்யராஜின் இந்தக் கூற்று, அவர் யாரை குறிவைத்து பேசினார் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைதளங்களில் இதைச் சுற்றிய விவாதங்கள் வேகமாக பரவி வருகின்றன.

Exit mobile version