August 13, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“ஜால்ரா அடித்து பதவியில் இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” – தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி

by Priscilla
December 18, 2025
in News
A A
0
“ஜால்ரா அடித்து பதவியில் இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” – தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் அமைதியாக இருப்பதாக விமர்சித்த முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அருண்ராஜ் கடும் விமர்சனம் முன்வைத்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், “ஜால்ரா அடித்து பதவியில் இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணாமலை விமர்சனத்திற்கு எதிர்வினையாக செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ், “அண்ணாமலை கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால், இன்று இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருப்பார்” என்று கருத்து தெரிவித்தார். இது, அவர் பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில் அமைந்தது.

இதற்குப் பதிலடி கொடுத்து பேசிய அண்ணாமலை, “ஒரு சினிமா நடிகருக்காக அரசு பதவியை ராஜினாமா செய்து ஜால்ரா அடிப்பவன் நான் இல்லை. ஜால்ரா அடித்து பதவியில் தொடர வேண்டும் என்றால், அந்தப் பதவியே எனக்கு தேவையில்லை” என்று கடுமையாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “நான் எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன். எந்தக் கட்சியிலும் சேர்ந்ததற்காக சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிப்பது எனது அரசியல் இல்லை. நான் நாட்டு மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பேன். ஒரு உன்னதமான கோட்பாட்டுக்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்” என்றார்.

எதிர்காலத்தில் தனக்கு பிரச்சினைகள் வந்தாலும், அது மக்களுக்காக இருக்கும் என்றும், அதனை பெருமையாகவே கருதுவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து விளக்கம்

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து பேசிய அண்ணாமலை, “2005ஆம் ஆண்டு இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்ட போது மகாத்மா காந்தியின் பெயர் அதில் இடம்பெறவில்லை. 2008ஆம் ஆண்டில்தான் காந்தி பெயர் சேர்க்கப்பட்டது. ஆனால், 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த ஸ்வச் பாரத் மிஷன் தொடக்கம் முதலே காந்தி பெயருடன் செயல்படுத்தப்படுகிறது” என்று கூறினார்.

மேலும், “முன்பு 100 நாட்களாக இருந்த வேலைவாய்ப்பு தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அவை மாநில அரசின் சொத்துகளாகவே இருக்கும்” என்றார்.

அதேபோல், “15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால், வேலையின்மை பென்ஷன் வழங்கும் விதியும் இதில் உள்ளது. இது கிராம மக்களுக்கு ஒரு முக்கியமான பாதுகாப்பு” என்றும் அண்ணாமலை விளக்கினார்.

என்டிஏ கூட்டணிக்குள் ஓ.பன்னீர்செல்வம் இணைவாரா என்ற கேள்விக்கு, “இப்போது அது குறித்து பேசுவது சரியானதாக இருக்காது. உரிய நேரத்தில் பேசுவேன்” என்று பதிலளித்தார்.

Tags: annamalaibjpthiruparakundramtn politicsTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கரூர் சம்பவத்துக்குப் பின் முதல் பொதுக்கூட்டம் : ஈரோட்டில் குவிந்த தொண்டர்கள்

Next Post

“It’s very wrong bro…” – விஜய் ஈரோடு வருகையை ஒட்டி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சர்ச்சை

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை
News

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு
News

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 
News

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
Next Post
“It’s very wrong bro…” – விஜய் ஈரோடு வருகையை ஒட்டி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சர்ச்சை

“It’s very wrong bro…” – விஜய் ஈரோடு வருகையை ஒட்டி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சர்ச்சை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார்

திருவாரூர் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார்

August 11, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

எப்போது மின்கம்பி அறுந்துவிழும் என்ற அச்சத்தோடு ஆடிப்பெருக்கை கொண்டாடிய திருவாரூர் பொதுமக்கள்

August 4, 2026
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

June 8, 2025
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.