கல்லூரி மாணவ-மாணவிகள், நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப, டிஜிட்டல் திறன் பெற, “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் 20 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன் முதல்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது. இந்த மடிக்கணினிகளில் தேவையான மென்பொருட்களுடன், “அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்கு புதிய சாளரம்” என்னும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கான, ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்பட உள்ளது.
















