190 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் – வழங்கினார் எம் எல் ஏ நிவேதாமுருகன்

தரங்கம்பாடியில் உள்ள புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 190 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 500 மாணவிகளுக்கு எம் எல் ஏ நிவேதாமுருகன் “வெற்றி நிச்சயம்” என்ற கையேடு வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தரங்கம்பாடியில் உள்ள புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 190 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மதிப்பெண்ணை அதிகரிக்கவும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 500 மாணவிகளுக்கு எம் எல் ஏ நிவேதாமுருகன் “வெற்றி நிச்சயம்” என்ற கையேடு வழங்கி பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார். அதனைத் தொடர்ந்து பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 117 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.அதனைத் தொடர்ந்து அப்பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் கையெடு வழங்கி பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார் . இதில் தரங்கை பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல்,ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் உங்கிட்ட ஏராளமான ஒரு பங்கேற்றனர்.

Exit mobile version