சென்னை : தமிழக சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்களில் 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் மொத்தம் 18 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று (மே 17) நிதித்துறையைச் சேர்ந்த 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் தற்போது 14 மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக இன்னும் நிலுவையில் உள்ளன.