சலூன் ஆக மாறிய அரசு மேல்நிலைப்பள்ளி! சரியாக முடிவெட்டி வராத பள்ளி மாணவர்களுக்கு முடிவெட்டிய உடற்கல்வி இயக்குனர்! ஏழு நூறு ரூபாய் செலவு செய்து மாணவர்களுக்கு முடி வெட்டினேன் பள்ளி மாணவர்களை மாற்ற ஒரு சிறிய முயற்சி என விளக்கம்!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்
அந்தப் பள்ளியில் நாட்றம்பள்ளி பகுதியை சார்ந்த பழனி உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பள்ளி மாணவர்களை ஒழுங்காக முடிவெட்டி வரவேண்டும் என கூறி வந்ததாக தெரிகிறது ஆனால் அதே போல வந்த பள்ளி மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு தன்னுடைய சொந்த பணம் 700 ரூபாயை போட்டு முடிவெட்டி உள்ளார்..
இந்த விவகாரம் வெளிவந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் பழனியிடம் விளக்கம் கேட்டபோது.
தற்போது பள்ளிக்கு ஆய்வுக்கு வரும் உயர் அதிகாரிகள் பள்ளி மாணவர்களை ஒழுங்காக பார்த்துக் கொள்ள மாட்டீர்களா காதில் கடுக்கான் போட்டும் முடி வெட்டாமலும் உள்ளனர் என எங்களை தான் கேள்வி கேட்கிறார்கள்
ஆனால் நாங்க சொன்னா பள்ளி மாணவர்கள் சரியாக கேட்பதில்லை
அடித்து கேட்டால் அதற்கு நாங்கள் பதில் சொல்லணும் தற்போது பள்ளி மாணவர்களை கண்டிப்பது மிக கஷ்டமாக உள்ளது.
மேலும் சில தினங்களாக மாணவர்களை முடி வெட்டி வரவேண்டும் என கூறி வந்தேன் ஆனால் அவர்கள் அதேபோல வந்ததால் தற்போது தலைமை ஆசிரியர் விடுமுறை என்ற காரணத்தால் இன்று பள்ளி என்னுடைய இன்சார்ஜில் இருந்தது அதனால் பள்ளி மாணவர்களுக்கு தன்னுடைய சொந்த பணத்தில் முடிவெட்டி விட்டேன்.
இருந்தபோதிலும் ஒரு சில மாணவர்கள் நீங்க என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பது போல ஆசிரியர்களை கலாய்க்கும் வகையிலும் பேசினர் அதனை எல்லாம் பொறுத்துக் கொண்டுதான் முடி வெட்டி விட்டோம்.
மேலும் இதனை சிலர் தவறு என்று கூறலாம் ஆனால் சிலர் நல்லது என்று கூறுவார்கள் எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதியே இவ்வாறு செய்தேன் என விளக்கம் அளித்தார்…
