March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“தேர்தல் கால மாயவலையில் அரசு ஊழியர்கள் சிக்க மாட்டார்கள்” திமுக அரசின் பழைய ஓய்வூதியத் திட்ட அறிவிப்பைச் விமர்சனம்!

by sowmiarajan
January 5, 2026
in News
A A
0
“தேர்தல் கால மாயவலையில் அரசு ஊழியர்கள் சிக்க மாட்டார்கள்” திமுக அரசின் பழைய ஓய்வூதியத் திட்ட அறிவிப்பைச் விமர்சனம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) தொடர்பாகத் திமுக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம் என அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் கடுமையாகச் சாடியுள்ளார். மதுரையில் இன்று நடைபெற்ற அதிமுக மருத்துவ அணி விழாவில், 2026-ஆம் ஆண்டுக்கான காலண்டர்களைப் பொதுமக்களுக்கு வழங்கி அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “கடந்த 2021 தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் 51 மாதங்களாகக் காலங்கடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், இப்போது தேர்தல் நெருங்கும் வேளையில் அரசு ஊழியர்களை ஏமாற்றப் பார்க்கிறார். குறிப்பாக, மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தையே எடப்பாடியார் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பின்னரே, நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அமல்படுத்தினார்கள். அதேபோல், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்தும் எடப்பாடியார் சட்டப்பேரவையிலும் வெளியிலும் தொடர் கேள்விகளை எழுப்பி வந்தார். தற்போது உளவுத்துறை அளித்த அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 75,035 வாக்குச்சாவடிகளிலும் அரசு ஊழியர்கள் திமுகவுக்கு எதிராகத் தயாராகிவிட்டனர் என்பதும், 2026-இல் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவது உறுதி என்பதும் தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சியில்தான் அவசர அவசரமாக இந்த அறிவிப்பைத் திமுக அரசு வெளியிட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அத்திட்டத்தின் தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், “உண்மையான பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சம்பளப் பிடித்தம் கிடையாது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் 10 சதவீதப் பிடித்தம் பற்றிக் கூறப்படுகிறது. இது அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல். கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இத்திட்டத்திற்காகத் தங்கள் பங்களிப்பைத் தெளிவாக அறிவித்துள்ளன. ஆனால், தமிழக அரசு 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று மொட்டையாகக் கூறுகிறதே தவிர, நிதி ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளிக்கவில்லை. வரும் பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும் நிலையில், நிதி ஒதுக்கீடு இல்லாமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமற்றது” என விளக்கமளித்தார்.

அரசுப் பணியிடங்கள் குறித்துப் பேசிய டாக்டர் சரவணன், “ஐந்தரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று கூறிவிட்டு, இதுவரை வெறும் 70 ஆயிரம் இடங்களை மட்டுமே நிரப்பியுள்ளதாகக் கூறுவது அப்பட்டமான பொய். 16 லட்சம் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை நான்கு ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது தேர்தலுக்காக வீசப்படும் திமுகவின் இந்த மாயவலையில் அரசு ஊழியர்கள் யாரும் விழமாட்டார்கள். வரும் 2026-இல் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி; அதுவே தமிழக அரசு ஊழியர்களின் பொற்காலமாக அமையும்” என்று அவர் தனது உரையில் தெரிவித்தார். இந்த நிகழ்வில் அதிமுக மருத்துவ அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

Tags: announcementemployeesprotection DMK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரம் கண்காணிப்பு அலுவலர் இரா.லலிதா அதிரடி ஆய்வு!

Next Post

முத்துப்பேட்டையில் 42 குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டு மனைப் பட்டா மாவட்ட ஆட்சியர் வழங்கினர்!

Related Posts

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 
News

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்
News

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்
News

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை
News

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026
Next Post
முத்துப்பேட்டையில் 42 குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டு மனைப் பட்டா மாவட்ட ஆட்சியர் வழங்கினர்!

முத்துப்பேட்டையில் 42 குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டு மனைப் பட்டா மாவட்ட ஆட்சியர் வழங்கினர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

November 26, 2025
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

November 15, 2025
மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

November 5, 2025
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

0
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

0
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

0
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

0
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026

Recent News

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.