மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் காணும் பொங்கலை முன்னிட்டு 46 ஆம் ஆண்டு மாபெரும் குதிரை, மாடுகளுக்கான எல்கை பந்தயம் (ரேக்ளா ரேஸ்) தொடங்கியது. சின்ன மாட்டு வண்டிகளுக்கான போட்டியில் இளைஞர் ஒருவர் மீது மாட்டு வண்டி மோதி ஏறி சென்ற நிலையில் காயமடைந்த இளைஞர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று மாபெரும் மாடு குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் (ரேக்ளா) நடைபெறும். தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை போன்று பாரம்பரிய திருவிழாவான திருக்கடையூரில்காணும் காணும் பொங்கல் தினமான இன்று 46 ஆம் ஆண்டு மாடு குதிரை வண்டிகளுக்கான கேள்வி பந்தயம் துவங்கியது. திருக்கடையூர் முதல் தரங்கம்பாடி வரை 10 கி.மீ நடைபெறும் எல்கை (ரேக்ளா) பந்தயத்தில், தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடு மற்றும் குதிரை வண்டிகளுடன் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். முதல் போட்டியாக சின்ன மாட்டு வண்டிகளுக்கான போட்டிகள் தொடங்கியது. போட்டியினை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கொடியசைத்து துவங்கி வைத்தார். 12 போட்டியாளர்களின் மாடுகள் சீறிப்பாய்ந்து பந்தயத்தில் ஓடதொடங்கியது. அப்போது போட்டி தொடங்கும் இடத்தில் இருந்த இளைஞர் ஒருவர் மீது மாடு மோதியதில் இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதனை தொடர்ந்து பின்வந்த மாடுகள் அந்த இளைஞர் மீது ஏறி சென்ற நிலையில் மயக்கமடைந்து சாலையிலேயே படுத்துவிட்டார். உடனடியாக காயமடைந்த இளைஞரை அங்கு இருந்த பொதுமக்கள் இழுத்து தூக்கிச் சென்று ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது















