மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் ஆய்வு, அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் காவல்துறை தடுத்தும் நுழைந்த கட்சியினர் காரணமாக, ஆம்புலன்ஸ் ல் நோயாளிகள் அவதி, மருந்து குடித்து சிகிச்சை பெறும் நோயாளிக்கு கையில் தூக்கிப்பிடித்து, சலைன் பாட்டில், ஏற்றிய உறவினர்கள், காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிக்கு, காலில் கட்டை பிரித்து காயத்திற்கு மருந்து போடவில்லை என்று அமைச்சரிடம் குற்றம் சாட்டிய உறவினர்கள், கூட்டத்திலும் ரீல்ஸ் எடுத்த மயிலாடுதுறை எம்எல்ஏ :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உணவுத்துறை அமைச்சரும், மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வெங்கட்ரமணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர், நேற்று இரவு நடைபெற்ற தீ விபத்தில், காயமடைந்த தீயணைப்பு வீரரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அமைச்சருடன் கூட்டமாக வந்த தவெகவினர் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் கூட்டமாக உள்ளே நுழைந்ததால், நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாக்கினர். அவசர சிகிச்சைக்காக வீல் சேரில் கொண்டுவரப்பட்ட ஒரு நோயாளி உள்ளே சிகிச்சைக்கு செல்ல முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் அவதி அடைந்தனர். இதேபோல் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய நபர் ஒருவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்ட பொழுது கூட்டமாக நின்று கொண்டு ஆம்புலன்ஸில் வந்த நோயாளிக்கு வழிவிடாமல், கட்சியினர் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக, விஷமருந்திய இளைஞர் ஒருவருக்கு,மாடிப்படி என் கீழே படுக்கை வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது, அவருக்கு மருந்து பாட்டில் ஏற்றுவதற்கு உறவினர் ஒருவர் பாட்டிலை கையில் மேலே பிடித்தபடி சிகிச்சை பெறுவதற்கு உதவி செய்தார். இதற்கான உபகரணங்கள் கூட முறையாக இல்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மூன்றாவது மாடியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பொழுது, ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவில், காலில் அறுவை சிகிச்சை செய்த நோயாளி ஒருவருக்கு இரண்டு நாட்களாக கட்டை பிரித்து, காலை சுத்தம் செய்து மீண்டும் புதிதாக கட்டு போடாமல் இருந்ததாக பாதிக்கப்பட்டவரின் மகன் மருத்துவமனை ஊழியர்களிடம் சத்தம்பட்டார், இதைப் பார்த்த அமைச்சர் நோயாளியின் உறவினரை சமாதானப்படுத்தினார். இந்நிலையில் தனியார் புகைப்பட கலைஞர் ஒருவரை வைத்து, ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வரும் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜமால் யூனுஸ், ரீல்ஸ் எடுப்பதிலேயே குறியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
