திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த பொன்முடி பாலியல் தொழிலாளர் குறித்து பேசியது விமர்சனத்துக்குள்ளானதால் திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டார். பொன்முடி நீக்கப்பட்டது திமுகவில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கட்சியில் மீண்டும் தனக்கு துனை பொதுச்செயலாளர் பதவி வழங்க வேண்டுமென பொன்முடி வலியுறுத்தி வந்த நிலையில் திமுகவின் துணை பொதுச்செயலாளராக பொன்முடியையும், சாமிநாதனையும் அறிவித்து திமுகவின் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்வினை தொடர்ந்து பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டதை வரவேற்கும் விதமாக விழுப்புரம் காந்தி சிலை மற்றும் திமுக கட்சி அலுவலகம் முன்பாக திமுக நகர செயலாளர் சக்கரை தலைமையிலான திமுகவினர் மேலதளங்கள் முழங்க பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். திமுகவில் மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே போன்று விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
