கமல்ஹாசன் நடிப்பில் அன்பறிவ் இயக்கும் புதிய படம் ‘KH 237’ கடந்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. ‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு கமல் நடிக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். இந்த படத்தில் பிரபல மலையாள எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன் இணைந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கமல்ஹாசன் எப்போதுமே துறையில் சிறந்த ஆளுமைகளுடன் பணியாற்ற விரும்புவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதில் ஒரு பகுதியாகவே இப்போது ஷ்யாம் புஷ்கரனுடன் இணைந்துள்ளார்.
யார் இந்த ஷ்யாம் புஷ்கரன் ?
மலையாள சினிமாவில் முக்கியமான கதாசிரியராகத் திகழ்பவர் ஷ்யாம் புஷ்கரன். ஆஷிக் அபு இயக்கிய ‘Salt N’ Pepper’ படத்தின் கதையை திலீஷ் நாயருடன் இணைந்து எழுதியதன் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அந்த படம் தமிழில் ‘உன் சமையல் அறையில்’ என பிரகாஷ் ராஜ் மூலம் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.
இதன்பிறகு ‘22 Female Kottayam’, ‘Idukki Gold’, ‘Mayanadhi’, ‘Rifle Club’ உள்ளிட்ட படங்களுக்குக் கதையெழுதியுள்ளார். மேலும் ‘Maheshinte Prathikaaram’, ‘Thondimuthalum Driksakshiyum’, ‘Kumbalangi Nights’ போன்ற விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படங்களும் இவரது படைப்புகளாகும்.
அன்பறிவின் இயக்குனர் அறிமுகம்
சண்டைப் பயிற்சியாளர்களாகப் புகழ் பெற்ற அன்பறிவ், இயக்குனர்களாக தங்கள் பயணத்தை ‘KH 237’ மூலம் தொடங்க உள்ளனர். இந்த படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் வகையில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
கமல்ஹாசனுடன் ஷ்யாம் புஷ்கரன் இணைவதால், ரசிகர்களிடையே புதுமையான கதைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.