மயிலாடுதுறை அருகே சரக்கு வாகனம் மோதியதில் எலக்ட்ரிஷன் உயிரிழப்பு. போலீசார் விசாரணை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் முத்துக்குமார் (வயது 40) . எலக்ட்ரிஷன் வேலை செய்து வந்த இவர், தேவையான பொருட்கள் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் நேற்று மயிலாடுதுறை நோக்கி சென்றுள்ளார். அப்போது சீர்காழி மெயின் ரோட்டில் உளுத்துக்குப்பை பகுதியை கடந்த போது எதிரே அதிவேகமாக வந்த டாட்டா ஏஸ் சரக்கு ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ சக்கரம் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே முத்துக்குமார் இறந்து போனார். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சரக்கு ஆட்டோவை ஒட்டி வந்த டிரைவர் பார்த்தசாரதி என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














