சீர்காழி கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்படாதவை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பு

சீர்காழி அருகே கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்படாதவை கண்டித்து தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் அறிவிப்பு பதாகை வைத்துள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டபேரவை தொகுதி , கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருபுவனவீரமங்கலம் கிராமத்திற்கு செல்லும் 1.5 கி.மீ தூரம் தார் சாலை மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தங்கள் கிராமத்திற்கு செல்ல தார் சாலை அமைத்து தரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மெத்தன போக்காக பணி செய்யும் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம பொதுமக்கள் வருகின்ற 2026 சட்டபேரவை தேர்தல் அன்று அனைத்து சமுதாய பொதுமக்களும் கருப்பு பேட்ச் அணிந்து தேர்தலை புறக்கணிக்க கிராம பொதுமக்கள் முடிவு செய்து அது குறித்த அறிவிப்பு பதாகை கிராமத்தில் பிரதான பகுதியில் வைத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version