அகரகீரங்குடி ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மரவாடியை அகற்றாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மரவாடியை அகற்றாததை கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர் :-

மயிலாடுதுறை மாவட்டம் அகரகீரங்குடி ஊராட்சியில் உள்ள வடக்கு தெருவில் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக இயங்கி வரும் மரவாடியால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்த மரவாடியை அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றும் , தற்போது அதன் உரிமையாளர் குடியிருப்புகளுக்கு மரவாடிக்கும் இடையே தீண்டாமை சுவர் எழுப்பி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே வருகின்ற சட்டமன்றத் தேர்தலை தங்கள் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து புறக்கணிக்கப் போவதாக தற்போது பேனர் வைத்துள்ளனர். மேலும் குடியிருப்பு அருகே இருந்த விளைநிலத்தை அதன் உரிமையாளர் பெற்றுக் கொண்டு தொழிலை விரிவாக்கம் செய்வதாக கூறி அங்குள்ள குட்டை மற்றும் மரங்களை வெட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இப்பிரச்சனை தொடர்பாக மரவாடியின் உரிமையாளரிடம் கேட்டபோது முறையாக அனுமதி பெற்று மரவாடி நடத்தி வருவதாகவும் , தொழிலை விரிவுபடுத்த பட்டா இடத்தை முறையாக வாங்கி அங்கு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் விளக்கமளித்தார்.

பேட்டி.

  1. பிரசன்னா வழக்கறிஞர்.
  2. சரிதா தெருவாசி..
Exit mobile version