விழுப்புரம் மாவட்ட செயலாளர்  பசுபதி என்பவரை மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சிவி சண்முகத்தை அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கி பசுபதி என்பவரை மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பினை தொடர்ந்து விழுப்புரத்தில் நகர் மன்ற உறுப்பினர் கோல்ட் சேகர் தலைமை அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

அதிமுகவில் சிவி சண்முகம் தலைமையில் ஒரு பிரிவினரும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வரும் நிலையில் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிகழகத்திற்கு சிவி சண்முகம் தலைமையிலான தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிவி சண்முகம் எஸ் பி வேலுமணி ஆகியோரை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த சிவி சண்முகத்தை நீக்கி பசுபதியை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததால் பசுபதியின் ஆதரவாளர்களான அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கோல்ட் சேகர் தலைமையில் அதிமுகவை சார்ந்தவர்கள் விழுப்புரம் காந்தி சிலை முன்பாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Exit mobile version