மருத்துவர்களின் நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் 2-ம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக திருவள்ளூர் மாவட்ட மருத்துவர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் ஊதிய உயர்வு, விருப்ப ஓய்வு பெறுவதில் அனைத்து பிரிவு மருத்துவர்களுக்கும் அனுமதி அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தகுதிக்கேற்ற பதவி உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் அரசு கூடுதல் செயலருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை தொடங்கி இருப்பதாகவும் , சீனியாரிட்டி முறையை தீர்மானிக்கும் நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், விருப்ப ஓய்வு பெற இரண்டு துறை மருத்துவர்களுக்கு மட்டும் உள்ள திட்டத்தை அனைத்து துறை மருத்துவர்களுக்கும் கொடுக்க வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கடினமான பணிக்காக வழங்கப்படும் தொகையை 3,000 -மாக உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவர்களுக்கு பதவி உயர்வுடன் அதற்கான ஊதிய நிர்ணயமும் அதிகரிக்க வேண்டும் என்றும், அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் வருகிற பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றும் அதனை தொடர்ந்து ஆறாம் தேதி புறநானியாளிகள் பிரிவில் இரண்டு மணி நேரம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் இதற்கு சுமூக முடிவு ஏற்படாவிட்டால் 7ஆம் தேதி அன்று சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கூடி போராட்டங்களை தீவிரப் படுத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
