விழுப்புரத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் இன்றைய தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதனை முன்னிட்டு இன்று காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்திலிருந்து விழுப்புரம் திருச்சி சாலையில் திறந்த வெளி வாகனத்தில் தொண்டர்கள் பங்கேற்ற உற்சாகமான ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பயணித்தார்.
பின்னர் விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
