திருவாரூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் என்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்தில் 13,268 மாணவ மாணவிகள் விண்ணப்பித்த நிலையில் 5941 மாணவர்கள், 7105 மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உதவி இயக்குனர் அரசு தேர்வுகள் ஆஷா மனோகரி, முதன்மை கண்காணிப்பாளர் தியாகராஜன், வட்டாட்சியர் இளங்கோவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
