தமிழக அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், போதிய உணவு வழங்காமல் அலை கழித்ததை கண்டித்து, மூன்று சக்கர வாகனங்களுடன் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல் போராட்டம், மயிலாடுதுறையில் போக்குவரத்து பாதிப்பு :-
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திரா கேரளா, கர்நாடக மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் உதவித்தொகை அதிகரித்து வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தொடரும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், பிற்பகலை தாண்டியும் போதிய உணவு ஏற்பாடு செய்யப்படவில்லை. வழங்கப்பட்ட உணவின் அளவு குறைவாக இருந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் மயிலாடுதுறை திருவாரூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உணவு ஏற்பாடு செய்வதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நான்கு மணியை கடந்தவன் உணவு வராததால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
