சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. ஹாங்காங் நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 31 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவில் பொது சுகாதாரத்துறை சார்பில் சில அறிகுறிகள் இருக்க கூடிய நபர்களுக்கு சோதனை செய்ததில் 93 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிய பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 18 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது . மற்றும் பாண்டிச்சேரியில் 13 பேர், கேரளாவில் 15 பேர், கர்நாடகாவில் 4 பேர், மஹாராஷ்டிராவில் 7 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என தகவல்கள் தெரியவந்துள்ளது. டெல்லியில் ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சந்தேகத்திற்கு இடமான நோயாளிகள் மற்றும் சில அறிகுறி இருக்கக்கூடிய நோயாளிகள் தினந்தோறும் 8 முதல் 10 பேர் இந்த சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் கொரோனவா என்ற கேள்வியும், பயமும் பொது மக்கள் மத்தியில் ஏழவேண்டாம் என்று பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது.