தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதை கொரோனா தொற்று தீவிரத் தன்மை கொண்டதில்லை. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. கவலைப்படத் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட தரவுகளின்படி, ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 34 தொற்றுகள் அதிகரித்துள்ளன. அதாவது கோவிட்-19 தொற்று எண்ணிக்கை மே 19 ஆம் தேதி 66 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் மே 12 முதல் 19 வரை தமிழகம் முழுவதும் மொத்தம் 32 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிராவில், தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 12-ல் இருந்து அதிகரித்து 56 ஆக உயர்ந்துள்ளது