அம்பத்தூர் தொகுதியை சார்ந்த தவேக மகளிர் அணி அமைப்பாளர் மதுமிதா மற்றும் பெண் நிர்வாகிகள் உடன்புகார் மனுஅளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்
தவெக கட்சியில் இருக்கும் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மிகு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணையரகத்தில் அம்பத்துரை சேர்ந்த தவெக மகளிர் அணி நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
அரசியல் விமர்சகர் பொன்ராஜ் வெள்ளைசாமி கடந்த மார்ச் 18 ஆம் தேதி youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தவெக கட்சியில் இருக்கும் பெண்கள் குறித்து தரக்குறைவான அவதூறு கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தவெக கட்சியின் தலைவர் விஜய் நேற்று புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்தில் அம்பத்துரை சேர்ந்த தவெக மகளிர் அணி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர்புகார் அளித்துள்ளனர். பொன்ராஜ் கருத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இந்த புகார் அளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்
