மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான பழ.கருப்பையா மற்றும் வீடியோ வெளியிட்ட மின்னம்பலம் இன்றைய youtube சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்:-
மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான பழ. கருப்பையா மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிசத் பொறுப்பாளர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அளித்த மனுவில்
மதுரை ஆதினம் 293 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாட்சி செய்து சிறப்பாக சைவப் பணிகளை ஆற்றி வருகிறார். இந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமாகிய பழ.கருப்பையா என்பவர் “மதுரை ஆதீனம் ரௌடி போல, நெல்லுக்கடை பக்கிரி போல பேசுகிறார், பாகிஸ்தானை முடித்துவிடு, க்ளோஸ் பண்ணி விடு” என்று பேசுகிறார் இது என்ன மடாதிபதி செய்யும் வேலையா என்றும், வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வேறு மூன்றாம் நபர்களை மகிழ்விக்க வேண்டி வரம்பு மீறி தரக்குறைவான வார்த்தைகளால் மதுரை ஆதீன கர்த்தரை “சோத்து சாமியார்” என்றும்
, “தமிழகத்தின் அனைத்து ஆதீன கர்த்தர்களும் அறிவு இல்லை சோத்து சாமியார்கள்” என்றும் அவதூரான இந்துவிரோத கருத்துக்களை “மின்னம்பலம்” என்ற பிரபல யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்டு என்னை போன்ற லட்சக்கணக்கான இந்து சிவ பக்தர்களை தொடர்ந்து நோகடித்து வருகிறார். பாரத மாதா எங்கே இருக்கிறாள் என்றும், எந்த மனிதன் இரண்டு யோனியில் பிறந்திருக்கிறான் என்றும் அருவருக்கத்தக்க வகையில் பேசி உள்ளார். மேலும் பழ.கருப்பையா அவர்கள் எந்த சைவ ஆதீனத்துக்கும் அறிவு கிடையாது என்று மதகுருமார்களை இழிவு செய்து அதே காணொளியில் தொடர்ந்து ஒளி பரப்பப்பட்டு உலகின் பல நாடுகளில் உள்ள ஆதீன சீடர்களுக்கும், பக்தர்களுக்கும், அடியார்களுக்கும் மிகுந்த மன வேதனையும், மன உளச்சலையும் ஏற்படுத்தி இந்துக்களின் மத உரிமைகளை பெரிதும் பாதித்து சைவ சமய அன்பர்களை புண்படுத்தி வருகின்றது.
மடாதிபதிகள் சோற்றால் அடித்த மனிதர்கள் என்றும், அதிகார பூர்வ திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை தவிர தனி மனித உணர்ச்சி, பண்டார சந்நிதிகள் பாண்டியாக் காரில் பவனி வருகின்றார்கள். வாழ்க்கைக்கு கொஞ்சமும் குறைவில்லை என்றும் ஆதீனங்களை அவமதித்து பேசியுள்ள
பழ.கருப்பையா மீதும், மின்னம்பலம் என்ற யூடியூப் நிறுவனத்தின் மீதும் BNS 299 மற்றும் 302 பிரிவின் படி வழக்கு பதிவு செய்தும் பழ.கருப்பையா மதுரை ஆதீனத்தை பற்றி அவதூராக பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டுமெனவும், தொடர்ந்து இந்து விரோத கருத்துக்களை பகிர்ந்து வரும் மின்னம்பலம் யூடியூப் சேனலை தடை செய்தும் மேல் நடவடிக்கை எடுக்குமாறு அவர் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.