ஏப்ரல் 26,27ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் கோவை மாவட்டத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவுப்பு வெளியாகி உள்ளது .
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில், வரும் ஏப்ரல் 26,27ம் தேதி த.வெ.க., தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த முக்கிய கூட்டத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான களப்பணிகள் பற்றியும், அது தொடர்பாக கட்சி சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் பற்றியும், முதன்மையாக தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் பற்றியும் விஜய் உரையாட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதுதொடர்பான வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது ” ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும், பூத் கமிட்டி முகவர்களும் தான் “. எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி தொடர்பான பணிகளுக்கு முதுகெலும்பாகத் திகழும் பூத் கமிட்டி முகவர்கள் மட்டும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளுது.
மேலும் நடிகர் விஜய் முதன்முறையாக கட்சி தொடர்பான பணிக்காக கோவை செல்வது இது தான் முதல்முறை என்பதால் இந்த கூட்டம் அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கிய பங்காக அமையும் என்று கூறப்படுகிறது.