சென்னை மாநகர போக்குவரத்துக் கழக சார்பில் ஒரு முக்கிய சுற்றறிக்கை வெளியாகி உள்ளது அதில் மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள கூறியிருப்பதாவது
ஏற்கனவே கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி தெரிவிக்கப்பட்டதன்படி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்களின் வருகையை பயோமெட்ரிக் மூலம் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகம், அனைத்து பணிமனைகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள், ஓட்டுநர், நடத்துனர் , உள்ளிட்டோர் பயோமெட்ரிக் மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, 21-ந் தேதி திங்கட்கிழமை (இன்று) முதல் பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்” என்ற அறிவிப்பை மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் அறிவித்து உள்ளார் .