உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ். 88 வயதான இவருக்கு சென்ற பிப்ரவரி 14-ம் தேதி யாரும் எதிர்பாராத நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 38 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், உடல் நலம் சற்று சீரான நிலையில் கடந்த மார்ச் 23 அன்று மீண்டும் வாடிகன் திரும்பினார்.
நேற்று ஈஸ்டர் நாளை முன்னிட்டு கத்தோலிக்கர்களுக்கு தனது ஆசியை வழங்கியிருந்தார். இந்நிலையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த போப் பிரான்சிஸ் இன்று காலமானார் என்ற தகவல் வெளியாகி சோகத்தை எழுப்பி உள்ளது . இன்று காலை 7. 35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸின் மரணத்திற்கு உலகின் பல நாடு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டு முதல் போப் ஆக இருந்த வந்துள்ளார் போப் பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.